India
பார்சல் பெட்டியில் இருந்து படமெடுத்த பாம்பு; அதிர்ச்சியில் வெள வெளுத்து போன நாக்பூர் குடும்பத்தினர்!
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரின் தியானேஷ்வர் பகுதியில் வசித்து வருபவர் சுனில் லகேதே. அவரது மகள் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாக்பூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருவதால் பெங்களூருவில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை கூரியர் மூலம் சொந்த ஊருக்கு பார்சல் செய்திருக்கிறார் சுனில் லகேதே.
சுமார் 8 பார்சல் பெட்டிகள் கொண்ட பொருட்கள் கடந்த திங்களன்று நாக்பூர் சென்றடைந்தது. அப்போது ஒவ்வொன்றாக பிரித்து பார்த்துக் கொண்டிருந்த லகேதேவுக்கு நான்காவது பார்சலை பிரிக்கும் போது சத்தம் கேட்டதையடுத்து சந்தேகித்திருக்கார்.
இந்நிலையில், அந்த பார்சல் பெட்டியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கிய நிலையில் லகேதே அதிர்ச்சியுற்றுக்கிறார். இதனையடுத்து அந்த பெட்டியை வெளியே எடுத்துச் சென்ற போது அதிலிருந்து வெளியே வந்த பாம்பு வாய்க்கால் வழியாக சென்றிருக்கிறது.
உடனடியாக பாம்பு பிடிப்பவரை அழைத்து சோதனை செய்ததில் அந்த பாம்பு பிடிபடாமல் ஓடியிருக்கிறது. இதனிடையே பார்சல் பெட்டிக்குள் எப்படி பாம்பு வந்தது என்று லகேதேவின் குடும்பத்தினர் குழம்பி போயுள்ளனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!