India
பார்சல் பெட்டியில் இருந்து படமெடுத்த பாம்பு; அதிர்ச்சியில் வெள வெளுத்து போன நாக்பூர் குடும்பத்தினர்!
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரின் தியானேஷ்வர் பகுதியில் வசித்து வருபவர் சுனில் லகேதே. அவரது மகள் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாக்பூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருவதால் பெங்களூருவில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை கூரியர் மூலம் சொந்த ஊருக்கு பார்சல் செய்திருக்கிறார் சுனில் லகேதே.
சுமார் 8 பார்சல் பெட்டிகள் கொண்ட பொருட்கள் கடந்த திங்களன்று நாக்பூர் சென்றடைந்தது. அப்போது ஒவ்வொன்றாக பிரித்து பார்த்துக் கொண்டிருந்த லகேதேவுக்கு நான்காவது பார்சலை பிரிக்கும் போது சத்தம் கேட்டதையடுத்து சந்தேகித்திருக்கார்.
இந்நிலையில், அந்த பார்சல் பெட்டியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கிய நிலையில் லகேதே அதிர்ச்சியுற்றுக்கிறார். இதனையடுத்து அந்த பெட்டியை வெளியே எடுத்துச் சென்ற போது அதிலிருந்து வெளியே வந்த பாம்பு வாய்க்கால் வழியாக சென்றிருக்கிறது.
உடனடியாக பாம்பு பிடிப்பவரை அழைத்து சோதனை செய்ததில் அந்த பாம்பு பிடிபடாமல் ஓடியிருக்கிறது. இதனிடையே பார்சல் பெட்டிக்குள் எப்படி பாம்பு வந்தது என்று லகேதேவின் குடும்பத்தினர் குழம்பி போயுள்ளனர்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!