India
பார்சல் பெட்டியில் இருந்து படமெடுத்த பாம்பு; அதிர்ச்சியில் வெள வெளுத்து போன நாக்பூர் குடும்பத்தினர்!
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரின் தியானேஷ்வர் பகுதியில் வசித்து வருபவர் சுனில் லகேதே. அவரது மகள் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாக்பூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருவதால் பெங்களூருவில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை கூரியர் மூலம் சொந்த ஊருக்கு பார்சல் செய்திருக்கிறார் சுனில் லகேதே.
சுமார் 8 பார்சல் பெட்டிகள் கொண்ட பொருட்கள் கடந்த திங்களன்று நாக்பூர் சென்றடைந்தது. அப்போது ஒவ்வொன்றாக பிரித்து பார்த்துக் கொண்டிருந்த லகேதேவுக்கு நான்காவது பார்சலை பிரிக்கும் போது சத்தம் கேட்டதையடுத்து சந்தேகித்திருக்கார்.
இந்நிலையில், அந்த பார்சல் பெட்டியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கிய நிலையில் லகேதே அதிர்ச்சியுற்றுக்கிறார். இதனையடுத்து அந்த பெட்டியை வெளியே எடுத்துச் சென்ற போது அதிலிருந்து வெளியே வந்த பாம்பு வாய்க்கால் வழியாக சென்றிருக்கிறது.
உடனடியாக பாம்பு பிடிப்பவரை அழைத்து சோதனை செய்ததில் அந்த பாம்பு பிடிபடாமல் ஓடியிருக்கிறது. இதனிடையே பார்சல் பெட்டிக்குள் எப்படி பாம்பு வந்தது என்று லகேதேவின் குடும்பத்தினர் குழம்பி போயுள்ளனர்.
Also Read
-
முதலீடுகள் குறித்த திமுக மீதான விமர்சனம்.. - பொய்யை உடைத்து கீர்த்தனாவுக்கு TRB ராஜா கொடுத்த பதிலடி என்ன?
-
“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
“ரீல்ஸ் ரெடி.. சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்” : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி!
-
“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
-
”தொடருவாரா ஸ்டீபன் ஃப்ளெமிங்.. முடிவெடுத்த CSK.. தோனி சொன்னது இதுதான்” - முழு விவரம் உள்ளே!