India
வேலை நேரத்தில் மது குடித்த காவலாளி..தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்: பெங்களூருவில் அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் எச்.ஏ.எல் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த பசந்த் என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பசந்த் பணியின்போது மது குடித்துள்ளார். இதைப்பார்த்த குடியிருப்பின் உரிமையாளர் பாஸ்கர் ரெட்டி, "பணியில் இருக்கும்போது மது குடிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பு சங்கத்திடமும் காவலாளி பசந்த் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதனால் காவலாளி பசந்த், பாஸ்கர் ரெட்டி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடியிருப்பில் பாஸ்கர் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென பசந்த், பாஸ்கர் ரெட்டியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக குடியிருப்புவாசிகள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையில் பாஸ்கர் ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் காவலாளி பசந்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!