India
வேலை நேரத்தில் மது குடித்த காவலாளி..தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்: பெங்களூருவில் அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் எச்.ஏ.எல் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த பசந்த் என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பசந்த் பணியின்போது மது குடித்துள்ளார். இதைப்பார்த்த குடியிருப்பின் உரிமையாளர் பாஸ்கர் ரெட்டி, "பணியில் இருக்கும்போது மது குடிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பு சங்கத்திடமும் காவலாளி பசந்த் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதனால் காவலாளி பசந்த், பாஸ்கர் ரெட்டி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடியிருப்பில் பாஸ்கர் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென பசந்த், பாஸ்கர் ரெட்டியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக குடியிருப்புவாசிகள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையில் பாஸ்கர் ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் காவலாளி பசந்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!