India
"கடைசி வீடியோ கால்" : தனது மாணவர்களை கடைசியாக பார்த்துவிட்டு உயிர்விட்ட கேரள ஆசிரியை!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதவி. தொடக்கப் பள்ளி ஆசிரியரான இவர் ஆன்லைனில் தனது வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்கள் எடுத்து வந்திருந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஆசிரியர் மாதவி தனது மாணவர்களுக்கு வீடியோவை மியூட் செய்து ஆடியோ வழியாகப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு இருமல் ஏற்பட்டுள்ளது.
உடனே ஆசிரியர் மாதவி, 'நான் உங்களைப் பார்க்க வேண்டும் வீடியோவை ஆன் செய்யுங்கள்' என கூறியுள்ளார். இதையடுத்து மாணவர்கள் வீடியோவை ஆன் செய்தனர். பிறகு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு, 'எனக்கு உடல்நிலை சரியில்லை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்' என கூறி வகுப்பை முடித்துள்ளார்.
பிறகு, சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஆசிரியர் மாதவியின் உறவினர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடைசியாகத் தனது மாணவர்களைப் பார்த்து விட்டு ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !