India
“இரவு நேரத்தில் பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்ல கூடாது”: யோகி அரசை மறைமுகமாக விமர்சித்த பா.ஜ.க நிர்வாகி!
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க தேசிய துணைத் தலைவருமான பேபி ராணி மௌரியா பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேபி ராணி மௌரியா பேசும்போது, “காவல் நிலையங்களில் பெண் அதிகாரிகள் இருந்தாலும், பெண்கள் 5 மணிக்கு பிறகும், இருட்டிய பிறகும் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அடுத்தநாள் காலை சென்று புகார் கூறுங்கள்.
ஒருவேலைக் கட்டாயம் காவல்நிலையம் சென்றே தீரவேண்டும் என்றால் உங்களின் சகோதரர் அல்லது கணவர், தந்தையை உடன் அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் பேச்சு உத்தர பிரதேச பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச போலிஸாரின் கொடூர சம்பவங்களை பேபி ராணி மௌரியாவின் பேச்சு காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கடந்த வாரம் தான் ஆக்ராவில் அருண் வால்மீகி என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரை போலிஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது வீட்டிலிருந்த பெண்களிடம் போலிஸார் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் பேபி ராணியின் மேளரியாவின் பேச்சு உத்தர பிரதேச யாகி அரசை விமர்சிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
Also Read
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!