India
“போலி சான்றிதழ் காட்டி கல்லூரியில் சேர்ந்த BJP MLA” : 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இந்திரா பிரதாப் சிவாரி. பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 1990ம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி அயோத்தியாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி, 1992ம் ஆண்டு இந்திரா பிரதாப் திவாரி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூஜா சிங் இறுதித் தீர்ப்பு வழங்கினார். இதில் போலி சான்றிதழ்களைக் காட்டி பா.ஜ.க எம்.எல்.ஏ இந்திரா பிரதாப் திவாரி கல்லூரியில் சேர்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை குற்றவாளி என அறிவித்து ரூ.8 ஆயிரம் அபராதத்துடன் 5 ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றார். மேலும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே வழக்குத் தொடுத்த கல்லூரி முதல்வர் திருப்பாதி உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!