India
"முடிஞ்சா ஆட்சியை கவிழ்த்து பாருங்க" : பா.ஜ.கவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!
மகாராஷ்டிராவில் உறவு முறிந்தபின் சிவசேனாவை பா.ஜ.க குறிவைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, "இந்துத்துவா சித்தாந்தத்துக்கு அச்சுறுத்தல் வெளியே இருப்பவர்களால் வரவில்லை. இந்துத்துவா பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்களாலேயே அச்சுறுத்தல் வருகிறது.
இவர்களிடமிருந்து இந்துத்துவாவை காக்க மராத்திய மக்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும். மும்பையை போலிஸ் மாஃபியாக்கள் ஆள்கிறது எனக் கூறுகிறார்கள். இதுபோன்று உத்தர பிரதேசத்தைக் கூற முடியுமா?
பா.ஜ.கவை விட்டு பிரிந்தபின் சிவேசனாவை பா.ஜ.க குறிவைக்கிறது. இதற்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. மேலும் ஆட்சியைக் கவிழ்க்கவும் முயற்சி செய்து வருகிறார்கள். அடுத்த மாதத்தோடு 2 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறோம். முடிந்தால் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள். உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.கவும், அதன் முன்னோர்களும் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. இப்படி இருக்கும்போது சாவர்க்கரைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே