India
"முடிஞ்சா ஆட்சியை கவிழ்த்து பாருங்க" : பா.ஜ.கவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!
மகாராஷ்டிராவில் உறவு முறிந்தபின் சிவசேனாவை பா.ஜ.க குறிவைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, "இந்துத்துவா சித்தாந்தத்துக்கு அச்சுறுத்தல் வெளியே இருப்பவர்களால் வரவில்லை. இந்துத்துவா பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்களாலேயே அச்சுறுத்தல் வருகிறது.
இவர்களிடமிருந்து இந்துத்துவாவை காக்க மராத்திய மக்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும். மும்பையை போலிஸ் மாஃபியாக்கள் ஆள்கிறது எனக் கூறுகிறார்கள். இதுபோன்று உத்தர பிரதேசத்தைக் கூற முடியுமா?
பா.ஜ.கவை விட்டு பிரிந்தபின் சிவேசனாவை பா.ஜ.க குறிவைக்கிறது. இதற்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. மேலும் ஆட்சியைக் கவிழ்க்கவும் முயற்சி செய்து வருகிறார்கள். அடுத்த மாதத்தோடு 2 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறோம். முடிந்தால் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள். உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.கவும், அதன் முன்னோர்களும் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. இப்படி இருக்கும்போது சாவர்க்கரைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!