India
’காந்தி எங்களுக்கு தேசத்தந்தை இல்லை’ : சாவர்க்கர் பேரன் சர்ச்சை பேச்சு!
வீர் சாவர்க்ர் குறித்த புத்தக வெளியிட்டு விழாவில், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது " மகாத்மா காந்தி கேட்டுக் கொண்டதால்தான் வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார்" என தெரிவித்திருந்தார்.
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆதாரம் இருந்தால் ராஜ்நாத் சிங் அதை காட்ட வேண்டும் எனவும், மகாத்மாவுக்குப் பதில் வீர் சாவர்க்கரை தேசத் தந்தையாக பா.ஜ.க முன்னிலைப் படுத்த முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மகாத்மா காந்தியை நான் தேசத் தந்தையாக நினைக்கவில்லை என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில்," 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இந்த தேசத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
இதனால் மகாத்மா காந்தியை நான் சேத சந்தையாக நினைக்கவில்லை. எனது தாத்தா அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு கோரினார். அவர் உண்மையில் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் அவருக்குப் பெரிய பதவி வழங்கப்பட்டிருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!