India
பாலியல் வன்கொடுமையால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களின் வயது... NCRB வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
2020ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் 99% சிறுமிகளுக்கு எதிரானவையாக உள்ளது என ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 28,327 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமே 28,058 ஆகும். மேலும் 16 முதல் 18 வயதுக்குள் 14,092 வழக்குகளும், 12 முதல் 16 வயதுக்குள் 10,949 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் இருவரும் கிட்டத்தட்ட சமமாக வன்கொடுமைக்குள்ளாகிறார்கள் என்றாலும், பெண் குழந்தைகள் சிறுவர்களை விட அதிகமாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு சிறுமிகள் இரையாகி வருவதையே இந்த புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!