India
“பா.ஜ.கவில் இணைந்தது பெரிய தவறு” : மொட்டையடித்து கட்சியிலிருந்து விலகிய திரிபுரா MLA - என்ன காரணம்?
திரிபுரா மாநிலம், சூர்மா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையி,ல் ஒரு வாரத்திற்கு முன்பு இவர் மேற்குவங்கம் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற ஆஷிஷ் தாய் மொட்டையடித்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.கவில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன். மேலும் பா.ஜ.கவில் இருந்து நான் விலகுகிறேன். அடுத்தடுத்து மற்ற எம்.எல்.ஏக்களும் விலகுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சியுடன் பேசி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே கட்சியில் சேர்ந்தது தவறு என அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க வை சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!