India
“பா.ஜ.கவில் இணைந்தது பெரிய தவறு” : மொட்டையடித்து கட்சியிலிருந்து விலகிய திரிபுரா MLA - என்ன காரணம்?
திரிபுரா மாநிலம், சூர்மா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையி,ல் ஒரு வாரத்திற்கு முன்பு இவர் மேற்குவங்கம் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற ஆஷிஷ் தாய் மொட்டையடித்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.கவில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன். மேலும் பா.ஜ.கவில் இருந்து நான் விலகுகிறேன். அடுத்தடுத்து மற்ற எம்.எல்.ஏக்களும் விலகுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சியுடன் பேசி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே கட்சியில் சேர்ந்தது தவறு என அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க வை சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!