India
பகல் முழுவதும் குடி.. இரவில் பேருந்தில் சென்று திருடும் விநோத கொள்ளையன் : போலிஸில் சிக்கியது எப்படி?
புதுச்சேரி லாஸ்பேட்டை தேவகி நகரைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்துள்ளதாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கு வந்த போலிஸார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
இதில் ஒருவர் மட்டுமே போலிஸாரிடம் சிக்கினார். அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர் ஆம்பூரைச் சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை, கோரிமேடு ஆகிய பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இவர்மீது வேலூர், ஆம்பூர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினமும் ஆம்பூரிலிருந்து பேருந்து ஏறி புதுச்சேரிக்கு வந்து மதுக்கடைகளில் குடித்து விட்டு வீதி வீதியாகச் சென்று பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பிறகு இரவு நேரத்தில் அந்த வீட்டில் கொள்ளையடித்து விட்டு மீண்டும் பேருந்து ஏறி ஆம்பூருக்கு செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்து வந்துள்ளார்.
இதையடுத்து இவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை போலிஸார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிய இடங்களில் கைரேகைகூட பதியாமல் திருடி வந்த இவர் ஒரு போன்காலில் போலிஸிடம் சிக்கியுள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!