India
தெரு நாய் இறந்ததற்கு பேனர் அடித்து விருந்து வைத்து அஞ்சலி : ஒடிசாவில் நடந்த விநோதம்; காரணம் என்ன?
ஒடிசா மாநிலம், பத்ரக் பகுதியில் அதிகமான துரித உணவக கடைகள் உள்ளன. இங்குக் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெண் நாய்குட்டி ஒன்று வந்துள்ளது. இந்த நாயை அங்கிருக்கும் ஒரு கடை உரிமையாளர் பிஸ்வால் என்பவர் இதற்கு 'சம்பி' என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
மேலும் இந்த நாய்க்கு என்று தனியாக ஒரு தட்டு பராமரித்து, இதில் பிரியாணி, ரசகோலா, ரொட்டி அல்லது அரிசி, பிஸ்கட் என அங்கிருக்கும் அனைத்து கடை உரிமையார்களும் உணவு கொடுத்து அன்பாக சம்பியை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி சம்பி திடீரென இறந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர்கள் சோகத்தில் இருந்துள்ளனர். பிறகு நாய் இறந்து 11வது நாளில் பத்ரக் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விருந்து கொடுத்து சம்பிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் கடை வீதியில் சம்பியின் உருவம் பொருத்திய பேனர் ஒன்றை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். கடைக்காரர்களின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!
-
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !