India
தெரு நாய் இறந்ததற்கு பேனர் அடித்து விருந்து வைத்து அஞ்சலி : ஒடிசாவில் நடந்த விநோதம்; காரணம் என்ன?
ஒடிசா மாநிலம், பத்ரக் பகுதியில் அதிகமான துரித உணவக கடைகள் உள்ளன. இங்குக் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெண் நாய்குட்டி ஒன்று வந்துள்ளது. இந்த நாயை அங்கிருக்கும் ஒரு கடை உரிமையாளர் பிஸ்வால் என்பவர் இதற்கு 'சம்பி' என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
மேலும் இந்த நாய்க்கு என்று தனியாக ஒரு தட்டு பராமரித்து, இதில் பிரியாணி, ரசகோலா, ரொட்டி அல்லது அரிசி, பிஸ்கட் என அங்கிருக்கும் அனைத்து கடை உரிமையார்களும் உணவு கொடுத்து அன்பாக சம்பியை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி சம்பி திடீரென இறந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர்கள் சோகத்தில் இருந்துள்ளனர். பிறகு நாய் இறந்து 11வது நாளில் பத்ரக் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விருந்து கொடுத்து சம்பிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் கடை வீதியில் சம்பியின் உருவம் பொருத்திய பேனர் ஒன்றை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். கடைக்காரர்களின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?
-
“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு !
-
“புதிய காலத்தின் தொடக்கம்!” : AeroDefCon - 2025 சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!