India
மக்களே உஷார்.. ATM மையங்களில் நூதன திருட்டு : கைவரிசையை காட்டிய 2 பேர் கைது - போலிஸ் விசாரணை பகீர் தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கரி ஏ.டி.எம் மையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நல்லசோபாரா பகுதியில் இரண்டு நபர்கள் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் உதவுவதாகக் கூறி, அவரின் டெபிட் கார்டை திருடிக் கொண்டு அதற்கு பதிலாக வேறு கார்டை அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதை அங்கிருந்த போலிஸார் கவனித்துக் கொண்டிருந்தனர். பிறகு அந்த இரண்டு பேரை பிடித்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அக்பரலி ஷேக், சங்கர் ரங்கநாத் சுரத்கர் என்பதும், இவர்கள் இருவர்தான் வங்கி வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து ஏ.டிஎ.ம் கார்டுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!