India
மக்களே உஷார்.. ATM மையங்களில் நூதன திருட்டு : கைவரிசையை காட்டிய 2 பேர் கைது - போலிஸ் விசாரணை பகீர் தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கரி ஏ.டி.எம் மையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நல்லசோபாரா பகுதியில் இரண்டு நபர்கள் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் உதவுவதாகக் கூறி, அவரின் டெபிட் கார்டை திருடிக் கொண்டு அதற்கு பதிலாக வேறு கார்டை அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதை அங்கிருந்த போலிஸார் கவனித்துக் கொண்டிருந்தனர். பிறகு அந்த இரண்டு பேரை பிடித்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அக்பரலி ஷேக், சங்கர் ரங்கநாத் சுரத்கர் என்பதும், இவர்கள் இருவர்தான் வங்கி வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து ஏ.டிஎ.ம் கார்டுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!