India
மக்களே உஷார்.. ATM மையங்களில் நூதன திருட்டு : கைவரிசையை காட்டிய 2 பேர் கைது - போலிஸ் விசாரணை பகீர் தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம், பால்கரி ஏ.டி.எம் மையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக போலிஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நல்லசோபாரா பகுதியில் இரண்டு நபர்கள் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் உதவுவதாகக் கூறி, அவரின் டெபிட் கார்டை திருடிக் கொண்டு அதற்கு பதிலாக வேறு கார்டை அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதை அங்கிருந்த போலிஸார் கவனித்துக் கொண்டிருந்தனர். பிறகு அந்த இரண்டு பேரை பிடித்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அக்பரலி ஷேக், சங்கர் ரங்கநாத் சுரத்கர் என்பதும், இவர்கள் இருவர்தான் வங்கி வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து ஏ.டிஎ.ம் கார்டுகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!