India
“மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்” : என்.ஐ.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேசிய தகவல் மையம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து மென்பொருட்களும் வடிவமைக்கப்படுகின்றன. இதன்படி நீதிமன்றங்களுக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் தேசிய தகவல் மையமே வடிவமைத்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கமான சப்கா சத் சப்கா விகாஸ் என்ற வாசகமும் இடம்பெறும் வகையில் தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படம், வாசகங்களை நீக்க உடனடியாக என்.ஐ.சி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டதற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!