India
“மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்” : என்.ஐ.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேசிய தகவல் மையம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து மென்பொருட்களும் வடிவமைக்கப்படுகின்றன. இதன்படி நீதிமன்றங்களுக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் தேசிய தகவல் மையமே வடிவமைத்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கமான சப்கா சத் சப்கா விகாஸ் என்ற வாசகமும் இடம்பெறும் வகையில் தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படம், வாசகங்களை நீக்க உடனடியாக என்.ஐ.சி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டதற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!