India
“மோடியின் புகைப்படத்தை அகற்றுங்கள்” : என்.ஐ.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேசிய தகவல் மையம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் அனைத்து மென்பொருட்களும் வடிவமைக்கப்படுகின்றன. இதன்படி நீதிமன்றங்களுக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் தேசிய தகவல் மையமே வடிவமைத்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும், ஒன்றிய அரசின் முழக்கமான சப்கா சத் சப்கா விகாஸ் என்ற வாசகமும் இடம்பெறும் வகையில் தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படம், வாசகங்களை நீக்க உடனடியாக என்.ஐ.சி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மின்னஞ்சலின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டதற்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!