India
பாக்கெட் மணி தரமறுத்த தந்தை... துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு மகன் தற்கொலை : பெங்களூருவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படை தலைமை அலுவலகம் அருகே உள்ள நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அங்கு சென்ற போலிஸார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தவரின் சடலம் அருகே துப்பாக்கி, பெல்ட், செல்போன் ஆகியவை இருந்தன. அவற்றைக் போலிஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர் உயிரிழந்தது ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் ராகுல் பண்டாரி என்பது தெரியவந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த இவர் தந்தையிடம் பாக்கெட் மணியாக 500 ரூபாய் கேட்டுள்ளார். இதை அவரது தந்தை தர மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்து ராகுல் பண்டாரி தந்தையின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து ராகுல் பண்டாரியின் தந்தையிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!