India
“ஜெயிலுக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே” : ஆத்திரத்தில் மாமியாரை குத்திக் கொன்ற வாலிபர்!
மகாராஷ்டிர மாநிலம், மும்பை விலேபார்லே பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் ஷேக். இவருக்குத் திருமணமானபோது திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்த இப்ராகிம் ஷேக் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஒன்றாம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். பின்னர் மனைவியைப் பார்க்கும் ஆசையில் நேராக மாமியார் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு சென்றபோது மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் கர்ப்பமாகவும் இருந்துள்ளார். இதையடுத்து புதிய கணவனை விட்டுவிட்டு தன்னுடன் வருமாறு மனைவியை மிரட்டியுள்ளார்.
பிறகு அங்கிருந்து சென்ற அவர் அடுத்தநாள் மீண்டும் வந்து பார்த்தபோது மனைவி அங்கு இல்லை. இதுகுறித்து மாமியாரிடம் முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் ஷேக் தன்னிடம் இருந்த கத்தியால் மாமியாரை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலிஸார் புனேயில் தலைமறைவாக இருந்த இப்ராகிம் ஷேகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்