India
”மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குங்கள்; அப்போதுதான் ஜனநாயகம் வலுப்பெறும்” - ரகுராம் ராஜன் கருத்து!
இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே முழுமையாக நிர்வகிப்பது கடினம் என்பதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய ரகுராம் ராஜன், இந்தியா பெரிய நாடு என்பதால் ஒன்றிய அரசே அனைத்து மாநிலங்களையும் நிர்வகிப்பது கடினம் என்று கூறினார்.
ஒன்றிய அரசிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்றாலும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால்தான், ஜனநாயகம் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார் ரகுராம் ராஜன். மேலும், பொது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டால்தான் மக்களின் தேவைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசுக்கு தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. பொதுவான கட்டுப்பாடுகள் இல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைத்தால் அவை பொதுமக்களிடம் இருந்தே பணத்தை பிழிந்தெடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
தனியார் மயமாக்கலுக்கு பதிலாக நிர்வாகத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசு மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியதோடு செலவுகளை குறைக்கவும் அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடினார்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநில பொருளாதார ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் ரகுராம் ராஜன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!