India
ஜாமீனில் வெளி வந்த இளைஞர்.. வெட்டி படுகொலை செய்த பெண்ணின் தந்தை: காரணம் என்ன?
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் விஜய் மெர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது குறித்து பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் கடந்த மார்ச் மாதம் விஜய் மெர் இருக்கும் இடத்தை அறிந்து அவரிடம் இருந்து மைனர் பெண்ணை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் விஜய் மெர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பர் விஜய் மெரை கொலை செய்யத் திட்டம் போட்டனர்.
இதன்படி சம்பவத்தன்று விஜய் மெர் ராஜ்கோட்டின் சன்கபூர் சாலையில் இருப்பதை அறிந்த பெண்ணின் தந்தை அங்குச் சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விஜய் மெர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!