India
கோயிலில் பெண்ணுடன் இருந்த பூசாரி... தவறாக நினைத்து அடித்து விரட்டிய கிராம மக்கள்... நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் மாவட்டத்தில் சர்னேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பெண் ஒருவருடன் கோயிலில் உள்ள தனி அறையிலிருந்துள்ளார்.
இதைப் பார்த்த கிராம மக்கள் கோயிலில் இருவரும் தவறு செய்வதாக நினைத்து சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் பூசாரியுடன் இருந்த பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, செருப்பால் அடித்துள்ளனர்.
பின்னர், கிராம மக்களால் தாக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்,"எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே என்னைத் தாக்கி, ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
நாங்கள் கோவிலில் தனியாக இருந்ததைத் தவறாகப் புரிந்து கொண்டு எங்களைத் தாக்கியுள்ளனர். எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபடுவேன்" என தெரிவித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!