India
“மோடி அரசுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி கடும் தாக்கு!
இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதத்தில் வரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது கொரோனா அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையில் இருருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி தடுப்பூசிதான் என உலக சுகாதார அமைப்பும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது.
இருந்தபோதும், ஒன்றிய பா.ஜ.க அரசு தடுப்பூசிகள் கொள்முதல் விஷயத்தில் உரிய முறையில் செயல்படாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசுகள், ஒன்றிய அரசிடம் போராடியே தடுப்பூசிகளை பெற்று வரும் சூழலும் நிலவிவருகிறது.
இந்நிலையில், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, மாநிலங்களுக்கு போதிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கத் தவறிவிட்டது என பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க வங்க மாநிலத்தின் கொரோனா தடுப்பு குழுவில் உறுப்பினராக அபிஜித் விநாயக் பானர்ஜி உள்ளார். இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனைக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அபிஜித் பானர்ஜி,”நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திறன் ஒன்றிய அரசிடம் இல்லை. மூன்றாவது அலையின் தாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி வளர்ச்சி 7% குறைவாகச் சரிய நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!