India
"6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலை" : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஒன்றிய அரசு!
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 680 துணை இராணுவப் படையினர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குத்தான் இந்த பதில் அளித்துள்ளார். இது குறித்து மேலும் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 680 துணை ராணுவப்படையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒன்றிய ஆயுதப்படை போலிஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் குடும்ப பிரச்சனையாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், பொருளாதார சிக்கலினாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளையும் நிபுணர்களைக் கொண்டு அரசு ஆய்வு செய்து வருகிறது. அதேபோல் விபத்துகளில் 1,764 பேரும், என்கவுண்டரில் 323 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, 2019ம் ஆண்டில் மட்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1948 பேர் கைது செய்துள்ளதாகவும், இதில் 34 பேர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
-
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டம் -முதலமைச்சருக்கு The Print பாராட்டு!
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!