India
"6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலை" : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஒன்றிய அரசு!
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 680 துணை இராணுவப் படையினர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குத்தான் இந்த பதில் அளித்துள்ளார். இது குறித்து மேலும் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 680 துணை ராணுவப்படையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒன்றிய ஆயுதப்படை போலிஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் குடும்ப பிரச்சனையாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், பொருளாதார சிக்கலினாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளையும் நிபுணர்களைக் கொண்டு அரசு ஆய்வு செய்து வருகிறது. அதேபோல் விபத்துகளில் 1,764 பேரும், என்கவுண்டரில் 323 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, 2019ம் ஆண்டில் மட்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1948 பேர் கைது செய்துள்ளதாகவும், இதில் 34 பேர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!