India
“5 ஆண்டில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை” : ஆதாரங்கள் இருக்கும் போதே கூசாமல் பொய் பேசும் மோடி அரசு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல் - டீசல் உலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசாமல் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகளையும் பேசவிடாமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல்.ஹனுமந்தய்யா ஆகியோர், நாட்டில் எத்தனை பேர் மலக்குழியில் மரணமடைந்துள்ளனர் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளித்து பேசும் போதும், “கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் மலக்குழி மரணங்கள் ஒன்றுகூடப் பதிவாகவில்லை” என கூறினார். ஒன்றிய அமைச்சரின் இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி “ 19 மாநிலங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது. ஆனால், மழைக்காலக் கூட்டத்தொட ரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லைர் என மோடி அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவே - அதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரசு அரங்கேற்றியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!