India
“கல்வெட்டு மறைப்பு” : காங். ஆட்சியில் திறக்கப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறந்த புதுச்சேரி சபாநாயகர்!
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதனைக் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டும் அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏழு மாதங்களாகப் பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையத்தைச் சுத்தம் செய்து நேற்று சபாநாயகர் செல்வம் மீண்டும் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் காகிதகங்களை ஒட்டி மறைத்துவிட்டு, மீண்டும் புதிதாகக் கட்டியது போல் நாடகம் ஆடி அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் சபாநாயகர் திறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!