India
“கல்வெட்டு மறைப்பு” : காங். ஆட்சியில் திறக்கப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறந்த புதுச்சேரி சபாநாயகர்!
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதனைக் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டும் அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏழு மாதங்களாகப் பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையத்தைச் சுத்தம் செய்து நேற்று சபாநாயகர் செல்வம் மீண்டும் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் காகிதகங்களை ஒட்டி மறைத்துவிட்டு, மீண்டும் புதிதாகக் கட்டியது போல் நாடகம் ஆடி அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் சபாநாயகர் திறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!
-
”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!