India
ஊசியால் வாயை தைத்து ரயில்வே தண்டவாளத்தில் தந்தையை கட்டிவைத்த வளர்ப்பு மகன்: ஜார்கண்டில் நடந்த கொடூரம்!
ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு மாவட்டம் பிதிஹாரா கிராமத்தின் அருகே ரயில்வே தண்டவாளத்தில் முதியவரின் கால்கள் கட்டப்பட்டும், உதடுகள் தைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தைக்கப்பட்டிருந்த முதியவரின் உதட்டை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரின் பெயர் போலா ராம் என்பது தெரியவந்தது.
மேலும் முதியவரின் வளர்ப்பு மகன் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து முதியவரைத் தாக்கி, அவரின் உதடுகளை தைத்து, கை கால்களை கட்டி ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு முதியவரை ரயில்வே தண்டவாளத்தில் படுக்கை வைத்து கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்து இவர்கள் சென்றது தெரியவந்தது.
மேலும் வளர்ப்பு மகன் போலா ராமின் இரண்டாவது மனைவிக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முதல் மனைவி 2010-ம் ஆண்டு காலமானார். இரண்டாவது மனைவியுடன் இவருக்குத் தகராறு இருந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் பஞ்சாயத்து வரை சென்றுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து மகன் போலா ராமிடமும், இவரின் மனைவியிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மருத்துவப் படிப்பில் Sports Quota... MBBS, BDS இட ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அனுமதி.. - விவரம் உள்ளே!
-
100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை! : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!
-
“எப்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?