India
3 வாரத்தில் 2,100 பேர் பலி; 31,000 பேர் பாதிப்பு: கொரோனாவோடு இந்தியாவை மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேலையில், கருப்பு பூஞ்சை நோயும் நாடு முழுவதும் பரவி வருவது மருத்துவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.
கருப்பு பூஞ்சை நோய் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையே தாக்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த நோய்க்கு நாடு முழுவதும் Amphotericin-B என்ற மருந்து தட்டுப்பாடு இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் நாடு முழுவதும் 31,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 2109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த 3 வாரத்தில் மட்டும் 150 சதம் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7,057 பேர் கருப்பு பூச்சை நோயால் பாதிக்கப்பட்டதில் 606 பேர் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் 5418 பேர் பாதிக்கப்பட்டதில் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றிய மோடி அரசு கொரோனாவை அலட்சியத்துடன் கையாண்டு மக்களை காவு கொடுத்தது போன்று பூஞ்சை நோய்களுக்கும் பலி கொடுக்கப் போகிறதா என்றும் பல்வேறு தரப்பிடம் இருந்து கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!