India
3 வாரத்தில் 2,100 பேர் பலி; 31,000 பேர் பாதிப்பு: கொரோனாவோடு இந்தியாவை மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேலையில், கருப்பு பூஞ்சை நோயும் நாடு முழுவதும் பரவி வருவது மருத்துவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.
கருப்பு பூஞ்சை நோய் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையே தாக்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த நோய்க்கு நாடு முழுவதும் Amphotericin-B என்ற மருந்து தட்டுப்பாடு இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் நாடு முழுவதும் 31,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 2109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த 3 வாரத்தில் மட்டும் 150 சதம் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7,057 பேர் கருப்பு பூச்சை நோயால் பாதிக்கப்பட்டதில் 606 பேர் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் 5418 பேர் பாதிக்கப்பட்டதில் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றிய மோடி அரசு கொரோனாவை அலட்சியத்துடன் கையாண்டு மக்களை காவு கொடுத்தது போன்று பூஞ்சை நோய்களுக்கும் பலி கொடுக்கப் போகிறதா என்றும் பல்வேறு தரப்பிடம் இருந்து கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!