India
“கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறனை கண்டறிய ஆய்வு” - ICMR முடிவு!
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இதுவரை 20 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும், அவற்றின் கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் ஐ.சி.எம்.ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர், “45 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் ஐ.சி.எம்.ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த உள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர் ஆகியோரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும்.
கொரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்தவாரத்திலிருந்து தொடங்கலாம்.
கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் எவ்வாறு செயல்படுகிறது, கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒப்பீடும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?