India
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி - ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
இந்தியாவில் குறைந்து வந்திருந்த கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதம் திடிரென அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு பரவிலின் போது ஏற்பட்டதை விட கூடுதலான தொற்று எண்ணிக்கை பதிவாகி வந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் முறையாக 3 லடதத்தை தாண்டியது.
பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்து ஏப்ரல் 30ம் தேதி 4 லட்சத்தை தாண்டியது. பிறகு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 4.01 லட்சத்திற்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வந்தது. இதையடுத்து சற்று எண்ணிக்கை குறைந்தது. ஆனால், மே 7 ம் தேதி மீண்டும் அதிக உச்சமாக 4.14 லட்சமாகப் பதிவானது.
அதன் பின்னர் 4 லட்சத்திலிருந்து கொரோனா எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக 3 லட்சத்திற்கு மேல் பதிவாக வந்த கொரோனா தொற்று இன்று 2,81,386 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதற்குக் காரணம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் கிடைக்காமல் இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!
-
"இன்னும் எத்தனை உயிர்கள்?" - த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!