India
‘தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு விற்றீர்கள்’; மோடியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்!
கொரோனா பெருந்தொற்றில் இந்தியா சிக்கித் திணறி வருகிறது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதே வேலையில், தடுப்பூசிகளும் மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தற்போது ஒரே ஆயுதமாகத் தடுப்பூசி கருதப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் கோட்டை விட்டதால், நாடு முழுவதும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் "நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்" என்றே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இப்படி டெல்லி முழுவதுமே பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுவரொட்டிகளை ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 17 பேரை கைது செய்த போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!