India
“பா.ஜ.கவிற்கு ஆதரவு நிலைபாடு?.. தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்” : காங்கிரஸ் வலியுறுத்தல்!
தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் புதிய விதிமுறைகளையும், தகுதியையும் வகுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார். மேலும் தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ள தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்றே, தற்போது நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்துக்கு எட்டுகட்ட தேர்தலை அறிவித்தது முதலே பல அரசியல் கட்சிகள் பல கேள்விகளை எழுப்பினர்.
வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி முகத்தில் இருந்த மமதாபானர்ஜி திடீரென 1736 வாக்குகள் வித்தியாசத்தில் நந்திகிராமில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மா, உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வை அமைத்து தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க உரிய தகுதியையும், விதிமுறைகளையும் வகுத்து அறிவிக்க வேண்டும். தொடர் புகார்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய ஆணையத்தை கலைத்து உத்தரவிட வேண்டும். தற்போதைய ஆணையர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!