India
“பா.ஜ.கவிற்கு ஆதரவு நிலைபாடு?.. தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்” : காங்கிரஸ் வலியுறுத்தல்!
தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் புதிய விதிமுறைகளையும், தகுதியையும் வகுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார். மேலும் தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ள தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்றே, தற்போது நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்துக்கு எட்டுகட்ட தேர்தலை அறிவித்தது முதலே பல அரசியல் கட்சிகள் பல கேள்விகளை எழுப்பினர்.
வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி முகத்தில் இருந்த மமதாபானர்ஜி திடீரென 1736 வாக்குகள் வித்தியாசத்தில் நந்திகிராமில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மா, உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வை அமைத்து தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க உரிய தகுதியையும், விதிமுறைகளையும் வகுத்து அறிவிக்க வேண்டும். தொடர் புகார்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய ஆணையத்தை கலைத்து உத்தரவிட வேண்டும். தற்போதைய ஆணையர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!