India
இரவில் அறிவிப்பு, காலையில் வாபஸ் : துக்ளக் தர்பாரையும் மிஞ்சி கோமாளித்தனம் செய்யும் மோடி அரசு!
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நடப்பு 202-22 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.5 சதவீதம் முதல் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இது பி.பி.எப் திட்டத்தில் வட்டி விகிதம் 7. சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு வட்டி 5.9 சதவீதமாகவும் (பழைய வட்டி விகிதம் 6.8%) குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு வட்டி 6.9 சதவீதம் (7.6%) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் படிப்புச்செலவு, திருமணச் செலவு உட்பட பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக சிறுசேமிப்பு திட்டங்களில்தான் மக்கள் முதலீடு செய்கின்றனர். இதுபோல், பணி ஓய்வு பெற்ற முதியவர்கள் பலரும் சிறுசேமிப்பு திட்ட வட்டியை நம்பி தங்கள் ஓய்வூதிய பலன்களை முதலீடு செய்து வைத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்து வருவது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தது. இந்நிலையில், சிறுசேமிப்பு கணக்குகளான வட்டி விகிதம் குறைப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்ததைத் தொடர்ந்து மோடி அரசு தனது உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், “சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. 2020 - 2021 கடைசி காலாண்டுக்கான வட்டி விகிதமே பின்பற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்