India
“எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகளும், அசாமில் 72.14% வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பல இடங்களில், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மோதல் சம்வவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு வாக்கு பதிவாகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அளித்துள்ள புகாரில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற காசிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது மின்னணு இயந்திரந்தில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு சாக்குகள் பதிவானதாகவும், விவிபேட் இயந்திரத்தில் இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில், மக்களை வாக்களிக்காவிடாமல் பா.ஜ.கவினர் தடுத்துள்ளனர்.
எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Also Read
-
“புயல் சேதம் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிடவேண்டும்! : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
-
எரிசக்தி திறனிலும் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு!: ஒன்றிய அரசு வெளியிட்ட SEEI குறியீட்டில் தெரிவிப்பது என்ன?
-
“பிரதமர் மோடியின் ‘கபட நாடகம்’ அடங்கிய உரை!” : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி கண்டனம்!
-
“இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!