India
“எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகளும், அசாமில் 72.14% வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பல இடங்களில், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மோதல் சம்வவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு வாக்கு பதிவாகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அளித்துள்ள புகாரில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற காசிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது மின்னணு இயந்திரந்தில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு சாக்குகள் பதிவானதாகவும், விவிபேட் இயந்திரத்தில் இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில், மக்களை வாக்களிக்காவிடாமல் பா.ஜ.கவினர் தடுத்துள்ளனர்.
எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!