India
நள்ளிரவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.. டெல்லி போராட்டக் களத்தில் பதற்றம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நீக்கக் கோரியும் டெல்லி குண்டலி எல்லையில் விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று முறை விவசாயிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.
டி.டி.ஐ. வணிக வளாகம் அருகே நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கிசூடு நடத்திய அந்த மர்ம நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
Also Read
-
இதை படிக்க 3 நாட்கள் எதற்கு? Prepare Well Next Time : முதலமைச்சர் பதிலுரைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் திட்டமிட்டு அனுமதி மறுத்த சபாநாயகர் : தர்ணா - தி.மு.க வெளிநடப்பு!
-
த.வெ.க அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி : நடந்தது என்ன?
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!