India
நள்ளிரவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.. டெல்லி போராட்டக் களத்தில் பதற்றம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நீக்கக் கோரியும் டெல்லி குண்டலி எல்லையில் விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று முறை விவசாயிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.
டி.டி.ஐ. வணிக வளாகம் அருகே நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கிசூடு நடத்திய அந்த மர்ம நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
Also Read
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!