India
நள்ளிரவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.. டெல்லி போராட்டக் களத்தில் பதற்றம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நீக்கக் கோரியும் டெல்லி குண்டலி எல்லையில் விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று முறை விவசாயிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.
டி.டி.ஐ. வணிக வளாகம் அருகே நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கிசூடு நடத்திய அந்த மர்ம நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
Also Read
-
திருக்கோயில் பயிற்சிப் பள்ளிமாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !