India
ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை.. மறுபுறம் ஃபாஸ்டேக்.. வரிந்து கட்டி வசூல் வேட்டை நடத்தும் பாஜக அரசு..!!
பிப்ரவரி 16ஆம் தேதி நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்தப்படும் முறை நடைமுறைக்கு வந்தது. அது போல, தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் பல்வேறு வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியாக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
16ஆம் தேதி நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரட்டிப்பு சுங்கவரி வசூல் செய்வதால் தங்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களை முற்றிலுமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வாகன ஓட்டிகள் வேதனையுடன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஃபாஸ்டேக் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான வாகனங்களில் இரட்டிப்பான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
அனைத்து வகையிலும் சாமானிய மக்களை இந்த மத்திய பாஜக அரசு வஞ்சித்து, மக்களிடம் இருந்து பெரும் வரி பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடாமல் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இறைத்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!