India
கோவாக்சின் தடுப்பூசியை நிராகரித்த சத்தீஸ்கர் அரசு : மருந்தில் காலாவதி தேதி இல்லை என குற்றச்சாட்டு!
மக்களை கொல்லும் கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து, தங்கள் நாட்டு மக்களுக்குச் செலுத்தி வருகின்றனர். இந்த வரிசையில், இந்தியாவும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளை 7 லட்சம் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தும் விதமாக ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி மருந்து செலுத்தும் பணியைத் துவக்கியது.
இதனைத் தொடர்ந்து, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை மாநில வாரியாக பிரித்துக் கொடுத்தது மத்திய அரசு. இந்த மருந்துகளை அந்தந்த மாநில அரசுகளும், முன்கள பணியாளர்களுக்குச் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடியாததால், அதன் செயல்திறன் இன்னும் உறுதியாகவில்லை என்றும் கோவாக்சின் தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என எங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்து வேண்டாம் என மத்திய அரசிடம் சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.
இதையடுத்து, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுதிய கடிதத்தில், தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி இல்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!