India
கோவாக்சின் தடுப்பூசியை நிராகரித்த சத்தீஸ்கர் அரசு : மருந்தில் காலாவதி தேதி இல்லை என குற்றச்சாட்டு!
மக்களை கொல்லும் கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து, தங்கள் நாட்டு மக்களுக்குச் செலுத்தி வருகின்றனர். இந்த வரிசையில், இந்தியாவும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளை 7 லட்சம் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தும் விதமாக ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி மருந்து செலுத்தும் பணியைத் துவக்கியது.
இதனைத் தொடர்ந்து, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை மாநில வாரியாக பிரித்துக் கொடுத்தது மத்திய அரசு. இந்த மருந்துகளை அந்தந்த மாநில அரசுகளும், முன்கள பணியாளர்களுக்குச் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடியாததால், அதன் செயல்திறன் இன்னும் உறுதியாகவில்லை என்றும் கோவாக்சின் தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என எங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்து வேண்டாம் என மத்திய அரசிடம் சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.
இதையடுத்து, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுதிய கடிதத்தில், தடுப்பூசி குப்பியில் காலாவதி தேதி இல்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!