India
“போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த சுகாதார ஊழியர்கள்” : மகாராஷ்டிராவில் நடந்த அவலம் !
நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவில் 1978-ம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக தவறுதலாக சுகாதார ஊழியர்கள் சானிடைசர் கொடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில், உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில், கவனக்குறைவாக சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினியைக் கொடுத்துள்ளனர்.
இதில், ஒரு குழந்தை வாந்தி எடுக்கவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளன. பின்னர் அங்கு குழந்தைக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையின்போது, கிருமி நாசினி வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த சுகாதார ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தைகளுக்கு வழங்கும் போலியோ சொட்டு மருந்து விவகாரத்தில், சுகாதார ஊழியர்கள் அலட்சியமாக நடந்துக்கொண்ட சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!