India
“எங்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்” - மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்!
வேளாண் சட்டங்களில் திருத்தம் என்ற மத்திய அரசினுடைய சலுகை அறிவிப்பை விவசாய சங்கங்கள் மீண்டும் நிராகரித்தன. மேலும், விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.
சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும் படியும் கூறி விவசாயத் துறை இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாய சங்கங்களுக்கு இமெயில் மூலம் டிசம்பர் 9-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அனுப்பி உள்ள விவசாயிகள் பேச்சுவார்த்தையில் நிராகரிக்கப்பட்ட விபரங்களைதான் அரசு எழுத்து மூலம் மீண்டும் அனுப்பி இருப்பதாக கூறியுள்ளது. எனவே அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு இறங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதேபோன்று போராட்டத்தில் ஈடுபடாத சில அரசியல் சேர்ப்பு சங்கங்களை அழைத்து பேசுவதையும் அரசு நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Also Read
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!
-
தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க..’ : உங்கள் எதிர்கால கனவுகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!