India
“5 நாட்களாக தொடர்ந்து ஏறும் பெட்ரோல்; டீசல் விலை”: கண்டுகொள்ளாமல் மக்களை வதைக்கும் மத்திய-மாநில அரசுகள்!
உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை மோடி அரசு கட்டுப்படுத்தாதன் விளைவு, மக்கள் மோசமான நிதி நிலைமையை சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பெட்ரோல் டீசல் விலையை வேறு நாள்தோறும் அதிகரிக்கின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.
இந்த நிலையில் மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
அதனால், இன்றைய பெட்ரோல் விலையை பொறுத்தவரை 86.02 ரூபாயாக உள்ளது. அதேபோல், டீசல் விலையை பொறுத்தவரை 78.72 ரூபாயாக உள்ளது. நேற்றைய விலையை ஒப்பிடுகையில், பெட்ரோல், டீசல் 24காசுகள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 5 நாட்களை ஒப்பிடுகையில் பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகளும், டீசல் லிட்டருக்கு 86 காசுகளும் விலை உயர்ந்துள்ளது. கடந்த 20 நாட்களை ஒப்பிடுகையில் 2 ரூபாயை நெருங்கி விலை உயர்ந்துள்ளதால் வாகனங்களில் செல்லும் சாமானிய மக்கள் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வால் சாமானிய மக்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, நாளுக்கு நாள் சில்லரை வகையில் விலை அதிகரித்தாலும், மாதம் முழுவதும் பார்க்கும் பொழுது விலையை சமாளிக்க முடியவில்லை என சாமானிய மக்கள் கூறுகின்றனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!