India
படேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5.24 கோடி மோசடி : சிலை நிர்வாகம் - வங்கி - ஏஜென்சியின் கூட்டுசதியா?
குஜராத்தில் படேல் சிலைக்கான பார்வையாளர் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.5 கோடியே 24 லட்சம் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அரசால் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது. இது ஒற்றுமையின் சிலை எனவும் பெயரிடப்பட்டது.
குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் இங்கு பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம், வதோதராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த டெபாசிட் தொகையை வசூல் செய்யும் பொறுப்பு தனியார் ஏஜென்சி ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஏஜென்சி ஊழியர்களில் சிலர் ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2018 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை பார்வையாளர் கட்டண வசூல் தொகைக்கும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கும் இடையே பெரும் தொகை வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஏஜென்சி ஊழியர்கள் மீது வங்கி மேலாளர் போலிஸில் புகார் செய்தார். போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, மோசடி செய்யப்பட்ட ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கியே தங்களது கணக்கில் செலுத்திவிட்டதாக சிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சிலை நிர்வாகத்திற்கும், வங்கிக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
Also Read
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!