India
இந்தியாவில் ஒரே நாளில் 41,322 பேர் பாதிப்பு: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.51 லட்சத்தை தாண்டியது! #COVID19
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 41,322 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,51,109 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 485 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,36,200 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 41,452 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 87,59,969 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,54,940 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.68% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.87% ஆக குறைந்துள்ளது.
Also Read
-
நெல் அறுவடை குறித்து எதுவும் தெரியாமல் கருத்து சொல்கிறார்கள்... பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர்!
-
காலமானார் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
-
கோவை, ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரங்கள் இதோ!
-
வெப்ப அலை... காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள தனிகவனம்: இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு புதிய முயற்சி!
-
மெட்ரோ ரயில் : உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!