India
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது ஓ.டி.டி. மற்றும் செய்தி இணையதளங்கள்... அரசாணை வெளியீடு!
திரைப்படங்கள், நீண்ட தொடர்கள் உள்ளிட்டவற்றை வெளியிடும் ஓ.டி.டி இணைய தளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அவற்றை மத்திய செய்தி ஒளிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையேதான் தற்போது இவற்றை மத்திய அரசினுடைய செய்தி ஒளிபரப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஓ.டி.டி. இணைய தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், தொடர்கள், ஆணவப் படங்கள் ஆகியவற்றை வெளியிடும் முன்பாக உரிய அனுமதியை பெறுவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை எந்தவித முன் அனுமதியும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொடர்கள் ஆகியவை ஓ.டி.டியில் வெளியிடப்பட்டு வந்தன. இனிமேல் மத்திய அரசினுடைய முன் அனுமதியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. அதே போல், செய்தி இணையதளங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!