India

“யாணை கவுனி ரயில் மேம்பாலம் பணி விரைவில் முடியும்” : மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் உறுதி!

ஈ.வே.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின்பிரிட்ஜ் சாலை ஆகியவற்றை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் புதிதாக கட்ட கோரி தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக்கை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேகர்பாபு தலைமைச் செயலகத்தில் நேரில் சென்று மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கால்வாயில் மழைநீர் வடிகால் செயலற்ற நிலையில் உள்ளது. இதனால் கடந்த 2015 சென்னையில் வெள்ளம் வந்தபோது வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு வசித்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினார்கள் .

கடந்த 2015 ஆம் ஆண்டு மழையின்போது அமைக்கப்பட்ட மழைநீர் கண்காணிப்பு குழு தனது அறிக்கையில் பழைய கால்வாயை இடித்துவிட்டு புதிய கால்வாய் கட்ட பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை கால்வாய் அமைக்கும் பணி நடைபெறவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் அதிகமாக வந்தால் அங்குள்ள பகுதி மக்கள் பெரும் பாதிப்பு உள்ளவர்கள். எனவே, உடனடியாக புதிய மழைநீர்வடிகால்வாய் பணி அமைக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றார்.

யாணைகவுனி ரயில் மேம்பாலம் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும். தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் மேம்பாலம் குறித்து துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு கேட்டு வருகிறார். அப்பணியும் விரைவில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ‌இ. சி.ஆர் பகுதி டோல் இடங்களில் பாஸ்ட் டாக் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பதாகவும் தற்போது அதை சரி செய்யப்பட்டதாகவும் நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்ததாக தயாநிதி மாறன் கூறினார்.

Also Read: காவலர் வீரவணக்க நாள்: கொரோனா காலத்தில் சீர்மிகு பணியாற்றியவர்கள் காவல்துறையினர் - மு.க.ஸ்டாலின் புகழாரம்!