India
கொரோனாவோடு டெல்லியில் காற்று மாசும் தீவிரம்.. இன்று முதல் ஹைட்ரஜன் பேருந்து இயக்கம்!
டெல்லியில் தொடர்ந்து நீடித்து வரும் காற்று மாசை குறைப்பதற்கு ஏதுவாக ஹைட்ரஜன் அதிகமாக உள்ள புதிய சி.என்.ஜி எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்காக இஸ்ரோவும், டாடா நிறுவனமும் இணைந்து 50 பேருந்துகளை வடிவமைத்துள்ளனர். இது வெற்றி பெறும் நேரத்தில் டெல்லியில் இயங்கக்கூடிய மற்ற பேருந்துகள் ஆட்டோ டாக்சி போன்றவைகளும் இந்த ஹைட்ரஜன் சி.என்.ஜி மூலம் இயக்கப்படும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 2001ஆம் ஆண்டு முதல் டெல்லியில் சிஎன்ஜி திட்டம் அமலுக்கு வந்தது. பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட 80% வாகனங்கள் சிஎன்ஜி மூலமே டெல்லியில் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வரும் சூழ்நிலையில், அடுத்த ஆண்டு முதல் டெல்லியில் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளை முழுமையாக மின்சார பேருந்துகளாக மாற்றி அமைக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!