India
பா.ஜ.க கூட்டணியில் பிளவு - பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு : என்ன காரணம்?
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியும் பிரச்சாரம் சூடு பிடிக்காமல் உள்ளது.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி ஆகியவற்றின் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பிரச்சனை கூட்டனியை பிளக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. குறிப்பாக, பா.ஜ.க கூட்டணியில் அங்கமாக உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக இடங்களைக் கேட்டது. அதனை வழங்க இரண்டு கட்சிகளும் மறுத்துவிட்டன.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பா.ஜ.க 121 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிடப் போவதாக எல்.ஜெ.பி அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அந்தக் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அதன் தலைவர் சிராக்பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!