India
வேளாண் சட்டங்களை நிராகரிக்க காங். ஆளும் மாநிலங்களில் சட்டமியற்றுவது குறித்து ஆலோசியுங்கள்: சோனியா காந்தி
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசாயிகளும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விவசாய விரோத மசோதாக்களுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு. அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குகிறது. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!