India
“34 ஆண்டுகளாக ஏற்படாத சிக்கல் இப்போது” - கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் விநோத கவலை!
கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் ‘கொரோனா’ என்பதால் கொரோனா தொற்றுக் காலத்தில் அவர் பற்றிய தகவல் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே ஒரு பெற்றோருக்கு 34 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு பாதிரியார் ஜேம்ஸ், ‘கொரோனா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். அதற்கு Crown என்று அர்த்தம் என்றும் கூறி உள்ளார்.
அந்தப் பெயர் பெற்றோருக்கும் பிடித்துவிடவே, அப்படியே அழைத்து வந்ததோடு, பள்ளியிலும் அந்தப் பெயரிலேயே சேர்த்துள்ளனர். இத்தனை ஆண்டு காலமாக அவருக்கு ஏற்படாத சோதனை கொரோனா தொற்று மூலம் ஏற்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் வைரஸின் பெயர் தனக்கு சூட்டப்பட்டதால் தற்போது படாதபாடுபட்டு வருவதாக எஸ்.கொரோனா வேடிக்கையாகத் கூறியுள்ளார்.
அடிக்கடி ரத்த தானம் செய்யும் பழக்கம் கொண்ட எஸ்.கொரோனா சமீபத்தில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ முகாமில் ரத்த தானம் செய்ய பெயர் கொடுத்துள்ளார். அப்போது பெயரை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் எஸ்.கொரோனா தெரிவித்துள்ளார். தனது மகன்களே விளையாட்டாக கொரோனா அம்மா என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
-
வெறுப்பு பேச்சு - பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய Instagram!
-
”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!