India

ஒரே நாளில் 96,550 பேர் பாதிப்பு; 1,209 பேர் பலி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் மோடி அரசு

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 28,328,080 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 913,918 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,588,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 196,328 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 96,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்,1,209 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது பிரேசிலை முந்திக்கொண்டு 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,65,863 லிருந்து 45,62,414 ஆக அதிகரித்துள்ளது அதேபோல்உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,062 லிருந்து, 76,271 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.70% ஆக அதிகரித்துள்ளது. இதில், 35.42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

Also Read: பாதிப்பு குறைந்த நாடுகளில் மீண்டும் அதிகரித்த தொடங்கிய கொரோனா தொற்று : உலக நாடுகளைச் சிதைக்கும் கொரோனா!