India
மத்திய அரசின் ஆத்மநிர்பார் இணையதளத்தில் பதிந்த 69 லட்சம் பேரில் வெறும் 7,700 நபர்களுக்கு மட்டுமே வேலை!?
மோடி அரசால் தொடங்கப்பட்ட ஆத்ம நிர்பார் இணையதளத்தில் பதிந்துகொண்ட 7 லட்சம் பேரில் வெறும் 691 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் மோடி அரசால் தொடங்கப்பட்ட அசீம் (ASEEM) ஆத்மநிர்பார் இணையதளத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மட்டும் 7 லட்சம் பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் 691 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் 40 நாட்களில் மட்டும் 69 லட்சம் பேர் பதிந்துகொண்டுள்ளனர். இந்த இணையதளத்தில் பதிந்துகொண்ட 69 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களில் 1.49 லட்சம் நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும், அதிலும் 7,700 நபர்கள் மட்டுமே வேலையில் இணைந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த தரவுகளை மத்திய திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இணையதளம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமில்லை எனவும், இந்த இணையதளத்தில் சொந்த தொழில் செய்யும் தையற்காரர்கள், எலெக்ட்ரீசியன்கள், செவிலியர்கள், விற்பனை முகவர்கள், கொரியர் டெலிவரி செய்பவர்கள், தையல் இயந்திர ஆபரேட்டர்கள் என பலருக்குமான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் சென்றதால், அவர்கள் செய்யும் பணிகளுக்கான தேவை 80% சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவது 9.87% சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த இணையதளத்தில் 514 நிறுவனங்கள் பதிந்துகொண்டுள்ளதாகவும், அதில் 443 நிறுவனங்கள் 2.92 லட்ச பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்திருந்ததாகவும், அதில் 1.49 லட்சம் வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 7,700 நபர்கள் மட்டுமே வேலையில் இணைந்தனர் எனத் தெரியவந்துள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!