India
மதுபோதைக்காக தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த 3 பேர் பரிதாப பலி - ஆந்திராவில் மீண்டும் சோகம்!
ஆந்திராவில் மதுவகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மதுவிற்கு அடிமையானவர்கள் மது வாங்கமுடியாத சூழலில் மதுபோதைக்காக பல விபரீத முடிவுகளை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, இந்த கிருமிநாசினி திரவத்துடன் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை சேர்த்து குடித்து போதை ஏற்றி வருகின்றனர்.
இந்த பழக்கம் ஆந்திராவின் பல மாவட்டங்களில் தொடார்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 31ம் தேதியன்றி கூட ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிசேடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மதுபோதையை அதிகமாக்க சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மதுபோதைக்காக தண்ணீரில் சானிடைசரை கலந்து குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் மதுவாங்க பணம் இல்லாததால் குடிதண்ணீரில் சானிடைசரைக் கலந்துக் குடித்துள்ளனர்.
சானிடைசரைக் குடித்த சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!