India
மதுபோதைக்காக தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த 3 பேர் பரிதாப பலி - ஆந்திராவில் மீண்டும் சோகம்!
ஆந்திராவில் மதுவகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மதுவிற்கு அடிமையானவர்கள் மது வாங்கமுடியாத சூழலில் மதுபோதைக்காக பல விபரீத முடிவுகளை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, இந்த கிருமிநாசினி திரவத்துடன் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை சேர்த்து குடித்து போதை ஏற்றி வருகின்றனர்.
இந்த பழக்கம் ஆந்திராவின் பல மாவட்டங்களில் தொடார்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 31ம் தேதியன்றி கூட ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிசேடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மதுபோதையை அதிகமாக்க சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மதுபோதைக்காக தண்ணீரில் சானிடைசரை கலந்து குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் மதுவாங்க பணம் இல்லாததால் குடிதண்ணீரில் சானிடைசரைக் கலந்துக் குடித்துள்ளனர்.
சானிடைசரைக் குடித்த சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!