India
“பப்ஜி விளையாட்டுக்கு ஆப்பு?” - இந்தியாவில் PUBG-க்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலனை!
இந்த மாத தொடக்கத்தில், டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர், ஷேர்இட் உட்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இந்த செயலிகள் அனைத்தும் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை என்று கூறியே தடைசெய்யப்பட்டன.
இந்நிலையில் பப்ஜி போன்ற கேம்கள் இந்திய அளவில் பல தரப்பட்ட வயதினரால் பெருமளவில் விளையாடப்படுகிறது. அந்த ஆப் மற்றும் லூடோ, ஸியோமியின் 14 MI ஆப்கள், அலி எக்ஸ்பிரஸ், ரெஸோ மற்றும் யூ லைக் போன்ற மற்ற ஆப்களையும் தடை செய்ய மத்திய அரசு பரீசிலித்து வருகிறது.
இந்த சீன செயலிகள் தேசியப் பாதுகாப்பு மற்றும் பயனாளிகளின் தனியுரிமையை (user privacy) மீறுவதாக உள்ளதா என இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்த சீன செயலிகள் மட்டுமல்லாமல், தனியுரிமையை மீறும் மற்ற தயாரிப்பாளர்களின் செயலிகளையும் தடை செய்ய அரசு பரீசிலித்து வருகிறது.
ஏற்கெனவே அரசு தடை செய்திருந்த 59 செயலிகளின் தயாரிப்பாளர் நிறுவனங்களுக்குப் பதிலளிக்க அரசு கொடுத்திருந்த கால அவகாசம் தற்போது முடியப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!