India
“தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு” - பணிந்தது தேர்தல் ஆணையம்!
தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முடிவை நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கைவிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, 65 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தேர்தல் ஆணைய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதைக் கைவிட வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை கொண்டுவரும் திட்டமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது.
Also Read
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !