India
“தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு” - பணிந்தது தேர்தல் ஆணையம்!
தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முடிவை நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கைவிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்துக்கு வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, 65 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தேர்தல் ஆணைய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதைக் கைவிட வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை கொண்டுவரும் திட்டமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!