India

இதுவரை இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கை உயர்வு: ஒரே நாளில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று... 582 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 13,459,235 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 581,221 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,545,077 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 139,143 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 29,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 582 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,309 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 1 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Also Read: “மோடி அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளை திருத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்” - வைகோ குற்றச்சாட்டு!